காதலிக்கு தெருவில் தாலி கட்டியவர் கைது
சென்னை:
சென்னை பெரம்பூரில் நடுத்தெருவில் தனது காதலிக்குத் தாலி கட்டிய காதலனை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.
சென்னைப் பெரம்பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ராஜலட்சுமி என்ற ராஜி (23). இதே பகுதியைச்சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் பழனி (23).
ராஜியும், பழனியும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.இதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து ராஜியை மணமுடித்தே தீருவது என்று சபதம் போட்டார் பழனி. பின்னர் புதன்கிழமை தனதுநண்பர்கள் நிக்சன், இதயமணி, செபாஸ்டியான் ஆகியோருடன் ராஜி வீட்டுக்கு வந்தார் பழனி.
பின்னர் ராஜி என்று அழைத்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்தார் ராஜி. உடனே பழனி, நடுத்தெருவில்வைத்து ராஜிக்குத் தாலி கட்டினார்.
இதை எதிர்பாராத ராஜி கூச்சல் போட்டுக் கத்தினார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இந்த நால்வர்கும்பலை துரத்தினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து ராஜி தனது தந்தையுடன் சென்று சென்னை திரு.வி.க.நகர் போலீஸில் புகார் செய்தார். புகாரின்அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஈவ் டீசிங் வழக்கில் பழனி உள்பட 4 பேரையும் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications