தாதாக்களுடன் தொடர்பு: இந்திப் படத் தயாரிப்பாளர் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

தனது புதிய படத்திற்காக மாபியா கும்பலிடம் பணம் வாங்கிய இந்திப் படத் தயாரிப்பாளர் நஸீம் ரிஸ்வியை மும்பை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இவர் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற புதிய படத்திற்காக மாபியா கும்பலிடமிருந்து பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், சல்மான் கான், ப்ரீத்தி ஸிந்தா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பல நடிகர், நடிகையரிடம் தனக்கும், மும்பை மாபியாகும்பலுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி அவர்களிடம் மொத்தமாக கால்ஷீட் வாங்கியுள்ளார் ரிஸ்வி. இதை நம்பி அவர்களும் கால்ஷீட்கொடுத்துள்ளனர்.

இரண்டே மாதங்களில் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், மும்பைபோலீஸார், நஸீமின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

நஸீம் ரிஸ்வி தனது படத்திற்கு வைர வியாபாரி பரத் ஷா தான் பண முதலீடு செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் பரத் ஷா வின் சொத்துக்கள் குறித்துவிசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சோரி சோரி சுப்கே சுப்கே படம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மும்பை நகர் உயர் போலீஸ் அதிகாரி மகேஷ் நரெய்ன் சிங் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, நஸீமுக்கும், மும்பை மாபியா கும்பலுக்கும்இடையே தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நஸீம் குறித்து, மும்பை இணைக் கமிஷனர் சிவானந்தன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும்வருமானவரித்துறை அதிகாரிகள், போலீஸ் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+