"ஊழலை ஒழிக்க அலிகளே சிறந்தவர்கள்

Subscribe to Oneindia Tamil

சேஹோர் (ம.பி):

அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழல்களை முழுவதுமாக ஒழிக்க தங்களைப் போன்ற அலிகளால் மட்டுமே முடியும் என்று மத்தியப் பிரதேச மாநிலம்சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த "அலி கவுன்சிலர் ராணி ஜான் பாயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

.சேஹோர் மாவட்ட கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராணி பாயல். இவர் கூறுகையில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்எங்களைப் போன்ற அலிகளைக் கண்டு அதிக அளவு பயப்படுகிறார்கள். இதனால்தான் நாங்கள் தற்போது பொதுவாழ்க்கையில் நுழையத் தொடங்கிவிட்டோம். நானும், மக்கள் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தவாறு நடந்து கொள்வேன் என்றார்.

ராணி சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அமெரிக்கன் வார்டு என்ற பிரபலமாகப் பேசப்படும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல்முதலாக இந்தியாவில் ஷப்னம் மவுசி என்ற அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அலிகளின் நலனிற்காகக் குரல்கொடுத்து வந்த அவர், தேசிய அளவில் அலிகள் தேர்தலில் நிற்பதற்காகவும் பல உதவிகளைச் செய்து வருகிறார்.

ராணிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஷப்னம், அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் அலிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றுதெரிவித்தார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் சேஹோர் மாவட்டத் துணைத்தலைவர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், அலிகள் அரசியலில் நுழைவது சமுதாய நலனுக்குநல்லதல்ல என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+