பலாத்கார புகார்: ஆசிரியருக்கு பள்ளி வர தடை
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்தததாக புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியரைப் பள்ளிக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்துநிறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் ஒரு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆசிரியராக தர்மலிங்கம் (54) வேலை பார்த்து வந்தார்.அவர் கடந்த ஜூன் மாதம் மாறுதலில் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளார்.
ஜலத்தூர் ஆரம்ப பள்ளியில் 50 மாணவிகள் உள்பட 96 பேர் படித்து வருகின்றனர். இங்கு 4 ஆசிரியர்கள் பணியிடம் உண்டு . தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்தபிறகு இரண்டு ஆசிரியைகள் மாற்றாலாகிச் சென்று விட்டனர்.
எனவே ஒரு பணியிடம் காலியாக இருந்தது. ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என்ற நிலையில், பள்ளி செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தலைமை ஆசிரியர்5ம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
வெளியில் சொன்னால் டி. சி.யை கிழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே மாணவிகள் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். இத்தகவல் மெல்லமெல்ல வெளியானபோது மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், பள்ளி முன்பாகக் கூடினர்.
அங்கு தலைமை ஆசிரியரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இப்பிரச்னையடுத்து தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் தர்மலிங்கத்திடம் விசாரணைநடத்தினர்.












Click it and Unblock the Notifications