குண்டு வீச்சு: 2 அல் உம்மா தொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
அரசு பஸ் டெப்போவிற்குள் வெடிகுண்டு வீசியது தொடர்பாக அல் உம்மா இயக்கத்தைச்சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் உக்கடம் பஸ் டிப்போவில்பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த குண்டு வீச்சில் ஒருவர் காயமடைந்தார். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த டெப்போவில் குண்டு வீசியது தொடர்பாக வின்சென்ட் ரோடைச்சேர்ந்த நசீர் (20). அண்ணாநகரைச் சேர்ந்த சுபேர் (20) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர்.
இருவரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, சத்தியமங்கலத்தில் மினார் இடிப்புச்சம்பவத்திற்காகவும், பாளையங்கோட்டை மசூதியில் குண்டு வீச்சு சம்பவத்தைத்தொடர்ந்தும் எதிர்ப்பைத் தெரிவிக்க அரசு பஸ் டெப்போவில் குண்டு வீசியதாகக்கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications