For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளுடன் பேச்சு: இலங்கை அமைச்சர்கள் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடன்அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இலங்கைஅமைச்சர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது

விடுதலைப் புலிகள் முதல் முறையாக அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அரசு தங்களுக்கு எந்தத் தகவலும்தெரிவிக்கவில்லை என்று சில அமைச்சர்களுக்கு மன வருத்தம் இருந்ததாகக்கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று ஒரு அமைச்சர்தெரிவித்திருக்கிறார்.

செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரயதர்ஷனா யாபா கூறுகையில், இலங்கை அரசுஅமைதிப்பேச்சுநடத்தவிருப்பதை அமைச்சர்கள் பலரும் வரவேற்றிருக்கிறார்கள். போர்நிறுத்தம் இல்லாமல் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது பற்றி ஆட்சேபம்தெரிவிக்கவில்லை.

அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து அமைச்சர்களிடையே எந்த விதமான கருத்துவேறுபாடும் இல்லை. பாதுகாப்பு துணை அமைச்சர் அனுராதா ரத்தவதே தனக்குஅமைதிப் பேச்சுவார்த்தை குறித்து தெரிவிக்கவில்லை என கோபம் கொண்டதாக வந்தசெய்திகள் தவறானவை.

அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முறையில் நடந்தால் வெற்றிகரமாக முடியும் என்பதுகுறித்துத்தான் கருத்து தெரிவித்தார். பத்திரிக்கைகள் இது போல் கருத்துக்களை திரித்துவெளியிடுவது அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பங்கம் விளைவிக்கும் என்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் செவ்வாய்கிழமை கூறுகயில்,இலங்கை அரசு 17 ஆண்டு காலமாக நடந்து வரும் போரை நிறுத்த பேச்சு வார்த்தைக்குதயாராக இருக்கிறது. அதே சமயம் விடுதலைப் புலிகள் கேட்பது போல் போர் நிறுத்தம்அறிவிக்க முடியாது.

பேச்சுவார்த்தை உடனடியாக துவங்க முடியாததற்கு முக்கியமான காரணம்எதுவுமில்லை. பேச்சு வார்த்தை நடக்கும் போதும் ராணுவ நடவடிக்கை தொடர்ந்துநடக்கும என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X