இடமாற்றம் செய்ய லஞ்சம் .. அரசு அதிகாரி கைது
ஈரோடு:
சமையல்காரரை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஈரோடு பிற்பட்டோர் நலத் துறைகண்காணிப்பாளரைப் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோபி அருகே உள்ள நம்பியூரில் பிற்படுத்தப்பட்டோர்மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சமையல்காரராக பசுபதி என்பவர் வேலைபார்த்து வந்தார்.
இவர் திடீரென ஈரோட்டில் உள்ள மாணவர் விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பசுபதி, ஈரோடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கண்காணிப்பாளரிடம் வந்து தன்னைமீண்டும் நம்பியூருக்கே மாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறுமாறுதல் செய்ய தனக்கு ரூ.2000 தர வேண்டும் என கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பணத்தை ஏற்பாடு செய்ய இயலாமல், பசுபதி திணறினார். பின்னர் போலீசில் புகார்செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பசுபதியுடன் சென்றனர். பசுபதியிடம் ரசாயணம் தடவியநோட்டைக் கொடுத்தனர். அதனை பசுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications