For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தபால் அதிகாரியை சுட்டுக் கொல்ல முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் உள்ள தபால் துறை அதிகாரி வீட்டில் யாரோ சில மர்ம நபர்கள்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இது குறித்து அதிகாரியின் கணவர் போலீசில் புகார்கூறியுள்ளார்.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தபால் துறை அதிகாரி விமலா குமாருக்கு அரசு வீடுஅளித்துள்ளது. விமலா குமார் மேற்கு மண்டல அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

தற்போது ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வருக்கு இவர் மாறுதல்செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் குமார் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒருநிறுவனத்தில் பொது மேலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அரசு ஒதுக்கிய வீட்டின் ஜன்னலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள்காணப்பட்டன. யாரோ மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக போலீசில் குமார்புகார் செய்தார்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார், ஜன்னல் வழியாக " ஏர் கன்னால்,சுட்டுள்ளதாக தெரிகிறது என்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X