For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு நிலையம்: ரஷ்யா ரூ. 13,800 கோடி கடனுதவி

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெனஇந்தியாவுக்கு ரூ 13 ஆயிரத்து 800 கோடி நீண்ட கால கடன் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.

இது பற்றி அணுசக்தி கமிஷனின் கூடுதல் செயலாளர் பிரேம் குமார் தெரிவித்ததாவது:

திருநேல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இங்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்வதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்கும்.

இதற்காக ரஷ்யா ரூ 13 ஆயிரத்து 800 கோடியை நீண்ட கால கடனாக வழங்க முன்வந்திருக்கிறது. 2020-ம் ஆண்டிற்குள் அணு மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாகஉயர்த்தப்படும். முதலில் 3 ஆயிரம் மொகவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படஉள்ளது.

இந்தியாவிற்கு 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றார் அவர்.

அணுமின் திட்ட இயக்குனர் ஜெயின் கூறுகையில், அணுமின் திட்ட அமைப்பு,பராமரிப்பு மற்றும் தரம் குறித்த அறிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்சமர்ப்பிக்கப்படும்.

அணு மின் நிலையம் அமைப்பதில் முதல் கட்ட பணிக்காக ரூ. 100 கோடி தேவை.இதில் ரூ 25 கோடி தர அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த பணி 6 ஆண்டுகளில்முடிவடையும்,

இந்த பணி முடிவடைந்தால் தென் மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியும்.தமிழகம் தவிர கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும் இந்த திட்டத்தில்முதலீடு செய்ய முன் வந்துள்ளன.

200 மெகாவாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுஉலைகளைவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X