மதம் மாறுவது முட்டாள்தனம் .. தலாய் லாமா
கன்னியாகுமரி:
மதம் மாறுவது முட்டாள்தனம் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அல்லூர் என்ற கிராமத்தில் சஞ்சீவனி குளோபல் வில்லேஜ் மற்றும் திபெத்திய மருந்துக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தலாய் லாமா பேசியதாவது:
மதம் மாறுவது தவறு, அது முட்டாள்தனமானது. அதைக் கைவிட்டு விட்டு மத சகிப்புதன்மைையைக் கடைப்பிடிக்கவேண்டும். உலகில் நிலவும் தர்மங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து மதங்களின் அடிப்படைக் கருத்தும் ஒன்றுதான். அவற்றை எடுத்துக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.மனிதர்களுக்கு அனைத்து மதத்திலும் ஒரே மாதிரியான அளவுகோல்தான் உள்ளது.
வாழ்க்கையில் மகிழ்ச்சி, எடுத்துக் கொண்ட இலக்கை அடைவது ஆகியவை அனைத்து மதங்களிலும் உள்ளது. ஒரேவித்தியாசம், சகிப்புதன்மை மட்டுமே.
மதம் மாறுவதால், எதிர்பாராத பின்விளைவுகளுக்கு நாம் வித்திடுகிறோம். அமைதி போய் விடுகிறது. இந்தியா,மதச்சார்பின்மைக்குப் பெயர் போனது.
நாடுகளுக்கிடையே வன்முறை மூளுவதும் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டுக்கு, நாடு, கண்டத்திற்குக் கண்டம்இப்போது கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விட்டன. பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் ரீதியிலும் பல்வேறுஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன.
நாடுகளுக்கு மனிதர்கள் எல்லை இட முடியாது. உலகம் முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். அதற்குவண்ணமோ, இன அடையாளமோ, அதிகார வரம்போ கொடுக்கக் கூடாது என்றார் லாமா.
யு.என்.ஐ.