மாநாடு நடத்துகிறது மக்கள் தமிழ் தேசியக் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்கள் தமிழ் தேசியக் கட்சியின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 23-ம் தேதிசென்னையில், நடைபெறுகிறது.

இது பற்றி அக் கட்சித் தலைவர் கண்ணப்பன் வெள்ளிக்கிழமை சென்னையில்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் விவரம்:

மக்கள் தமிழ் தேசம் கட்சியின் முதல் மாநில மாநாடு சென்னையில் இந்த மாதம் 23-ம் தேதிநடைபெறுகிறது.

மாநாட்டில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்காந்தி சிங் எம்.பி., மகாராஷ்டிராவின் இஸ்லாமியத் தலைவர் ஆசிம் உள்ளிட்ட பல்வேறுவட இந்தியத் தலைவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த பல சமுதாயத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

ஊர்வலம் சென்னை கத்திப்பாரா சந்திப்பு நேரு சாலையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.ராதாகிருஷ்ணன் சாலை அருகே இருக்கும் பிரசிடென்சி ஓட்டல் அருகேஅமைக்கபடவுள்ள மேடையிலிருந்து தலைவர்கள் ஊர்வலத்தை பார்வையிடுவார்கள்.

இந்த மாநாடு போட்டிக்காக நடத்தப்படவில்லை. மக்கள் நலன் கருதியே நடத்தப்படுகிறது.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதியே மாநாடுநடத்தப்படுகிறது.

மூன்றாவது அணி பற்றி இப்போது கருத்து எதுவும் கூற இயலாது. தேர்தல் அறிவிப்புவந்தவுடன் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வோம்.

மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வருவதில் தவறில்லை. மாநாடுமுடிந்தபின் தமிழகம் எங்கள் கட்சியின் பலம் குறித்து அறிந்து கொள்ளும் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+