பிரசார இயக்கம் துவக்கியது மார்க்சிஸ்ட் கம்யூ.
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் மதவாத கொள்கைகளை மக்களுக்கு விளக்கும் வகையில்,மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை தமிழ் மாநில, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சிசனிக்கிழமை துவக்கியது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் சங்கரய்யா வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:
பிரசார இயக்கத்தின்போது பா.ஜ.க.வின் மதவாத கொள்கைகள், வாஜ்பாய் அரசின்பொருளாதார கொள்கைகள் குறித்து மக்களிடம் விளக்குவோம்.
இதுதவிர, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்என்று கோரிக்கை விடுப்போம்.
இந்திய தொழில் துறையில், வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் மத்தியஅரசின் முடிவு தவறானது. இதன் மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு, தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவும் ஒத்து ஊதுகிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தீண்டாமைக் கொடுமையும்இன்னும் ஒழியாமல் உள்ளது. இந்த இரண்டு சமூகப் பேய்களை ஒழிப்பதற்குகடுமையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்.
மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள், கிராமங்களுக்கு கட்சியின் 12 பேர் அடங்கியபிரசாரக் குழு சென்று இந்த பிரசாரத்தில் ஈடுபடும். மொத்தம் 1000 இடங்களில்பொதுக்கூட்டங்களும் நடைபெறும் என்று கூறியுள்ளார் சங்கரய்யா.
யு.என்.ஐ.