பாரதீய வித்யா பவன் தலைவரானார் ஆர்.வி.
மும்பை:
பாரதீய வித்யா பவனின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவர் பொறுப்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரத ரத்னா விருது பெற்றவருமானசி.சுப்ரமணியம் இருந்து வந்தார். நவம்பர் 7-ம் தேதி அவர் மரணமடைந்தார்.
மும்பை ஆளுநர் மாளிகையில், சனிக்கிழமை நடந்த பாரதீய வித்யா பவன் கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவராகஆர்.வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்டார். துணைத் தலைவராக பிரவீன் சந்திர காந்தி பதவியேற்றார்.மகாராஷ்டிர மாநில ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரும் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மாலையில் கிர்காம் பகுதியில் நடந்த இரங்கல் கூட்டத்தில், மறைந்த சி.சுப்ரமணியத்திற்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டது. இதில் ஆர்.வெங்கட்ராமன் பேசுகையில், என்னுடைய அரசியல் சகோதரர் சி.சுப்ரமணியம்.உண்மையான சத்யாகிரஹியாக அவர் வாழந்தவர் என்றார்.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications