இறுதிச் சுற்றில் பயஸ், பூபதி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியான்டர் பயஸ், மகேஷ்பூபதி ஜோடி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெங்களூரில் கோல்ட் ஃபிளேக் ஏடிபி சாம்பியன் ஷிப் இரட்டையர் டென்னிஸ் போட்டிநடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்திய ஜோடி வெற்றிபெற்றதன் மூலம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது..
இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்குள் நுழைவது இது மூன்றாவது முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் லீச் மற்றும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எல்லிஸ் பேரைரா ஜோடியை 6-3, 7-5 என்ற நேர் செட்களில்பயஸ், பூபதி ஜோடி வென்றது
ஞாயிற்றுக்கிழமை இந்திய ஜோடி அமெரிக்காவின் டான் ஜான்சன் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் பியட் நார்வலுடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications