வாஜ்பாய் ஆட்சிக்கு ஆபத்தில்லை .. பெர்னாண்டஸ்
மைசூர்:
அயோத்தி பிரச்சினையால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும்கிடையாது. 5 ஆண்டு பதவிக்காலத்தையும் பிரதமர் வாஜ்பாய் முழுமையாக முடிப்பார் என்று மத்திய பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
மைசூரில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்தெரிவித்த கருத்துக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையும் முரண்படவில்லை. இதனால்கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை.
பிரதமர் கருத்து குறித்து அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் ஆகியவை தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.இருப்பினும் இதனால் எந்தப் பிரச்சினையும் எழாது.
பீகாரில் ஜனதாதளமும், சமதாக் கட்சியும் இணைவது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்புமாறு தமிழக, கர்நாடக அரசுகள் மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுத்திருந்தன. எனவே எல்லைப் பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டுள்ளது. வீரப்பனைப் பிடிக்கவேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications