எம்.ஜி.ஆர். நினைவு தினம் .. பேரணி நடத்துகிறார் திரு.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் அதிமுக சார்பில் மவுன ஊர்வலம் நடக்கிறது.
ஊர்வலத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு எம்.பி.தலைமை தாங்குவார்.
இதுகுறித்து எம்ஜிஆர் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 13 வது ஆண்டு நினைவுநாளையொட்டி எம்ஜிஆர் அதிமுக சார்பில் வரும் 24 ம் தேதி காலை 9.30 மணியளவில்சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலையிலிருந்து மவுன ஊர்வலம் புறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்த மவுன ஊர்வலத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்குவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications