பாண்டி. அருகே ராமதாஸ் கார் மறிப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே, சூரமங்கலம் என்ற கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வந்தகாரை சிலர் தடுத்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெட்டப்பாக்கம் என்ற சட்டசபைத் தொகுதியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமதாஸ்,ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்தார். ராமதாஸ், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் கொடியேற்றுவதற்குவிடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
ராமதாஸ் வருகையை எதிர்த்து அப்பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில்பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போலீஸார் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். பின்னர் கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து ராமதாஸ் சூரமங்கலம் என்ற இடத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். சிலகிராமங்களில் கொடி ஏற்றி விட்டு சூரமங்கலம் நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். ஈரப்பாக்கம் என்றஇடத்திற்கு அவர் வந்தபோது, சிலர் அவரது காரை தடுத்து நிறுத்தினர். அங்கு போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டிருந்தும் கூட இதை தவிர்க்க முடியவில்லை.
இதையடுத்து அங்கு பா.ம.கவினருக்கும், காரைத் தடுத்தவர்களுக்கும் இடையே மோதல் மூளும் சூழ்நிலைஏற்பட்டது. இதையடுத்து ஈரிப்பாக்கத்தில் கொடி ஏற்றாமலேயே ராமதாஸ் அங்கிருநது சென்றார்.
யு.என்.ஐ.