தண்டனையை எதிர்த்து செங்கோட்டையன் அப்பீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா போக்குவரத்துக் கழகத்தில் ரூ 75.42 லட்சம் ஊழல் புரிந்தது தொடர்பாக 5 வருட கடுங்காவல் தண்டனைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்திங்கள்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்.அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் பாடி கட்டுவது, டிக்கெட் அச்சடித்தல் போன்றவற்றில் ரூ75.42 கோடி ஊழல் செய்தது தொடர்பாக செங்கோட்டையன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் செங்கோட்டையனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஊழலுக்குஉடந்தையாக இருந்தது தொடர்பாக இவரது உதவியாளர் எழிலுக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை சிறப்பு நீதிபதி தார்வேஷ் கடந்த 14 ம் தேதி வழங்கினார்.

தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தன்னை ஜாமீனில் விடக் கோரியும் செங்கோட்டையன்உயர்நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷாகதிரி ஏற்றுக் கொண்டார். மனு மீது வரும் 20 ம் தேதி விசாரணை நடக்கும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+