அராபத்தை கோர்ட்டுக்கு இழுக்கும் யூத குடும்பம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்:

பாலஸ்தீனப் பகுதியில் நடந்த வன்முறையில், பாலஸ்தீனர்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களின் கொலைக்குபாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் தான் காரணம் என்று அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை அருகேயுள்ள ரமல்லா என்ற பகுதியில் வாடிம் நோர்ஸிச் (35), யூசுப் அவ்ரஹாமி (38) என்ற இரண்டு இஸ்ரேல் ராணுவவீரர்கள் கடந்த அக்டோபர் 12 ம் தேதி காவல் நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர்.

பாலஸ்தீனர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்த இருவரும்,அவர்களதுபற்களை வைத்து அடையாளம் காணப்பட்டனர்.

இந்த கொடூரக் கொலையைத் தடுக்க பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தும், பாலஸ்தீன அதிகாரிகளும் எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்று கூறிஅவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

நோர்ஸிச்சின் சகோதரர், மைக்கேல் கூறுகையில், இந்தக் கொலையைத் தடுக்க அதிகாரம் இருந்தும் அவர்கள் அதைச் செய்யவில்லை. கொலையாளிகளைபிடிக்கவும் முயற்சிக்கவில்லை என்றார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பாலஸ்தீனம் வந்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ராபின் கூக்கிடம், இஸ்ரேல் வீரர்கள்கொல்லப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அராபத் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+