For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் சோ-ஜெ.ரகசிய சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பத்திரிக்கையாளர் சோவை, சந்தித்துப் பேசினார்.

இவர்கள் இருவரும் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு அ.தி.மு.கவை தயார்படுத்தும் முக்கியப் பணிகளில் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்.

பல தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதிலும் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டார் எனவும்கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை பார்க்க சென்னை வந்தார்.

காளிமுத்துவை பார்த்த பின் அவர் ஹைதராபாத் சென்று விடுவார் என கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சென்னையிலேயே தங்கியிருக்கிறார்.

21-ம் தேதி நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்பு 23-ம் தேதி நடக்கவிருக்கும் இஃப்தார் விருந்துகொடுக்கவிருக்கிறார். 24-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நினைவு அமைதி ஊர்வலத்திலும் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே ஜெயலலிதா துக்ளக் ஆசிரியர் சோவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சோ.அவரை ஜெயலலிதாவே நேரில் சென்று பார்த்து, பேசியது வியப்பளிப்பதாக அமைந்துள்ளது.

ஜெயலலிதா சுமார் ஒரு மணிநேரம் சோவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா அவரிடம் சட்ட ஆலோசனை கேட்டிருக்கலாம் எனவும்,அரசியல் குறித்து ஆலோசனை செய்திருக்ககலாம் எனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

ராஜ்யசபா உறுப்பினராக பாரதீய ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோ. பாரதீய ஜனதாவை எதிர்த்து வரும் ஜெயலலிதா சோவை சந்தித்ததுபாரிதீய ஜனதா கட்சியிலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X