சென்னையில் நாளை கலெக்டர்கள் மாநாடு
சென்னை:
சென்னையில் செவ்வாய் கிழமை மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பொது விநியோகம், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்துஆய்வு செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
21ம் தேதி நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து அரசு செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள்மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.
பொது விநியோகத் திட்டம், மகளிர் சிறுவணிக கடன் திட்டம், அடிப்படை வசதிகள், குடி நீர் வழங்கல் தெரு விளக்குகள், சாலைகள் மற்றும் கிராமத்தெருக்கள் மேம்பாடு, பெரியார் நினைவு சமத்துவபுரம், பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம், உழவர் சந்தைகள், வருமுன் காப்போம் திட்டம்,கால்நடை பாதுகாப்புத் திட்டம், சிறப்பு திட்டத்தின் கீ பட்டா வழங்குதல், மினி பஸ் திட்டம், சிறுசேமிப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் இம்மாநாட்டில்பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications