அதிகரிக்கும் பெண் பட்டதாரிகள்
கோபி:
இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெண் பட்டதாரிகள் அதிகமாக இருப்பார்கள், ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர் என கோபியில்கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.
கோபியில் புதிய நகராட்சிப் பள்ளிக் கட்டடத்தை கல்வி அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்து பேசியதாவது:
தமிழக அரசு தான் கல்வித் துறைக்கு அதிகளவில் நிதியை செலவிட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 950 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில் 90சதவீதம் ஆசிரியர்களின் சம்பளமாகும். இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 3 லட்சம் பேர் பணியாற்று கின்றனர்.
இவர்களுக்கு தி.மு.க அரசு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு தேவையான அனைத்து வசதிகளையும் அளித்துள்ளது.கிராம முன்னேற்றங்களிலும், அடிப்படை வசதிகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது ஆண்களை விட பெண்கள் தான் கல்வியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கல்வியில் பெண்களின் பங்கு உயர்ந்துள்ளது. இன்னும் 5ஆண்டுகளில் பெண் பட்டதாரிகள் அதிகமாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு நிகராக அனைத்து அதிகாரங்களும் தற்போது பெண்களுக்கு சம அளவில் வழங்கப்பட்டு விட்டது. இன்டெர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் கல்விஉயர்ந்து வருகிறது. இது ஒரு புது யுகத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
டி.வி யில் கற்கப்படும் கல்வி, இன்டெர்நெட் வழியாக இனி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications