பயஸ், பூபதி தோல்வி
பெங்களூர்:
உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜோடிதோல்வியடைந்தது.
பெங்களூரில் ஏ.டி.பி. உலக இரட்டையர் டென்னிஸ் போட்டி நடந்து வந்தது. இந்தஇந்தியாவின் லியான்டர் பயசும், மகேஷ் பூபதியும் கலந்து கொண்டனர்.
துவக்கம் முதலே இந்தியா கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பலமாகஇருந்து வந்தது. முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.இதன் மூலம் நம்பிக்கை மேலும் வலுத்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில், அமெரிக்காவின்டோனால்டு ஜான்சன், தென்ஆப்பிரிக்காவின் பியட் நார்வல் ஜோடியை பயஸ், பூபதிஜோடி சந்தித்தது.
இந்த ஜோடியை லீக் போட்டியில் இந்திய அணியினர் நேர் செட்களில்வென்றிருந்தனர். இதனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றுவிடும்என்ற நம்பிக்கையுடன் ஏராளமான ரசிகர்கள் போட்டியைக் காண கூடியிருந்தனர்.
ஆனால், லீக் போட்டியில் தோல்வியுற்றதற்கு பழி வாங்கும் விதமாக சிறப்பாகவிளையாடியது ஜான்சன், நாவல் ஜோடி. இந்திய வீரர்கள் முழுத்திறமையையும்வெளிப்படுத்தாமல் விளையாடினர்.
மகேஷ் பூபதி பல தவறுகளைச் செய்தார். அவரது பல தவறுகள் எதிர் அணியினருக்குசாதகமாக அமைந்தது. இதனால் இந்திய அணி 6-3, 7-8 (8-10), 6-4 என்ற நேர்செட்டுகளில் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் தோல்வி கூடியிருந்த ஏராளமான ரசிகர்களை சோகத்தில்ஆழ்த்தியது. இந்த போட்டியில் வென்ற ஜான்சன், நாவல் ஜோடிக்கு 1 லடச்த்து 34ஆயிரம் அமெரிக்க டாலரும், தோல்வியடைந்த பயஸ், பூபதி ஜோடிக்கு 72 ஆயிரம்அமெரிக்க டாலர்களும் பரிசாக கிடைத்தது.












Click it and Unblock the Notifications