தலித் மக்களுக்காக குரல் கொடுப்பேன்: மூப்பனார்
சேலம்:
தலித் மக்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கிடைக்க துணை நிற்பேன் என சேலத்தில் நடந்த மாநாட்டில் மூப்பனார் தெரிவித்தார்.
சேலத்தில் குடியரசுக் கட்சி சார்பில் சமூக நீதி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கார் பேசியதாவது:
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தேசிய உணர்வு என வாஜ்பாய் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்வர்கள், சீக்கியர்கள், மற்றும் ஜைனமதம் உட்பட பிறமதத்தினருக்குத் தேசிய உணர்வு இல்லையா?
சர்வேதச அளவில் தாராளமயாக்கல், உலகமயமாக்கல், போன்றவற்றால், இந்தியா சீரழிந்து வருகிறது. விவசாயம் மிகவும் பாதிப்பிற்குள்ளகிவிடும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் பேசுகையில்,
தலித் மக்களை அரசு கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அரசு எதுவும் செய்வதில்லை. ஆட்சியில்,அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடி வருகின்றனர். இவர்களுக்கு துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications