திமுகவுடன் கூட்டணியில்லை ..பு.நீ.க. புரட்சி அறிவிப்பு
சென்னை:
எங்கள் தலைமையில் அமையும் கூட்டணியில் திமுக, அதிமுகவுக்கு இடமில்லைஎன்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
சமீப காலமாக தமிழகத்தில் புற்றீசல் போல் சாதிக் கட்சிகள் பெருகி பல பலபெயர்களில் உருவாகி வருகின்றன. அது போண முதலியார்களை "முதலீடாகக்கொண்டு அமைக்கப்பட்ட கட்சி புதிய நீதிக்கட்சி.
அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
புதிய நீதிக்கட்சி நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால்மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கி மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சிஅமைக்கும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கட்சியில் சேர்ந்தால் யார் மூன்றாவதுஅணிக்கு தலைமை ஏற்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆளும் தி.மு.க.வும். எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் அவர்கள் கூட்டணிகட்சிகளினாலேயே பலம் பெறுகின்றன. இந்த இரு திராவிட கட்சிகளும் தற்போதுபாட்டாளி மக்கள் கட்சியையே நம்பி இருக்கின்றன.
புதிய நீதிக்கட்சி தலைமையில் துவங்கவிருக்கும் மூன்றாவது அணியில் தி.மு.க.,அ.இ.அ.தி.மு.க.வை சேர்க்க மாட்டோம் .அந்த இரு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிதலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
ஜனவரி மாதம் 3-ம் தேதி நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள்குறித்தும், பல்வேறு முக்கிய பிரச்னை குறித்தும் முடிவெடுக்கப்படும் என அவர்கூறினார்.
யு.என்.ஐ.