For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் சரண் .. கோவையைக் கலக்கிய புரளி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் வீரப்பன் சரணடைவதாக எழுந்த புரளியையடுத்து அதிரடிப்படையினர் உள்பட பொதுமக்கள்கோவையில் பரபரப்பு அடைந்தனர்.

பண்ணாரி காடுகளில் வீரப்பனைத் தேடி அதிரடிப்படை நடத்தி வரும் சோதனையை அடுத்து அங்கிருந்து வீரப்பன்தப்பி நீலகிரி மலைப் பகுதிக்கு வீரப்பன் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.நீலகிரி மலைப் பகுதிகள் உட்பட ஆனைகட்டி முதல் சிறுவாணி அணை வரை தீவிரமாக அதிரடிப் படையினர்சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை கோவை நீதிமன்றத்தில் வீரப்பன் சரணடையப் போவதாக ஒரு புரளிகிளம்பியது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள், ஒவ்வொருவாகானங்களையும் தீவிரமாக சோதனையிட்டனர்.

அவ்வாறு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வீரப்பன் கூட்டாளி ஒருவரைப் பிடித்து விட்டதாகவும் வதந்திகிளம்பியது. இந்த புரளியையடுத்து பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைவரும் காட்டுப் பகுதிக்குச் சென்றுதிரும்பினர்.

தொண்டாமுத்தூர், தாளியூர் மற்றும் சிறுவாணி அணைப் பகுதியில் வீரப்பனைத் தேடும் வேட்டைதீவிரமாக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X