பயிற்சியாளர்களுக்குத்தான் தேவை பயிற்சி ..ஜெஃப் மார்ஷ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிப்பதே என்முக்கிய நோக்கம் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசராகபதவியேற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர் ஜெஃப் மார்ஷ். இவர்இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படமறுத்ததால், நியூசிலாந்தின் ஜான் ரைட் இந்திய அணிக்கு பயிற்சியாளராகநியமிக்கப்பட்டார்.

ஜெஃப் மார்ஷ் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் மார்ஷ் கூறியதாவது:

இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படவேண்டும். அதற்கு நான் முன்னுரிமை அளிப்பேன். பெங்களூரில் இருக்கும் தேசியஅகாடமியில் எல்லா விதமான வசதிகளும் இருக்கின்றன.

இந்தியாவில் திறமை வாயந்த பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பெங்களூரில் அடுத்தஆண்டு பிப்பவரி மாதம் பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கம் நடத்த உள்ளேன்.

இந்த கருத்தரங்கில் நாட்டிலுள்ள பயிற்சியாளர்களுக்கு பல ஆலோசனைகள்வழங்கப்படும். ஒரே நாளில் இந்திய அணியில் மாற்றங்கள் கொண்டுவர முடியாது.ஒரு வருடத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+