கேரள காட்டுக்குள் வீரப்பன்?
கோவை:
கேரள காட்டுக்குள் வீரப்பன் தப்பிச் சென்று விடாதபடி, அதிரடிப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நீலகிரியின் முக்கியப் பகுதியான கோத்தகிரியில் வீரப்பனைத் தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். வீரப்பன் கேரள மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்குத் தப்பிச் செல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான மருதமலை, ஆனைகட்டி, ஆலாந்துறை உட்பட பல்வேறு பகுதிகளிலும்வீரப்பனைத் தேடும் வேட்டையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு டி.ஜி.பி ராஜகோபாலனே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அவரே தேடுதல் வேட்டையை நேரடியாககண்காணித்தார்.
வீரப்பன், நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் நடமாடக் கூடும் என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் வேட்டை நடந்துள்ளது.பண்ணாரியில் முகாமிட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் விரைவில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.