வேலூர் வருகிறார் இலங்கைத் தூதர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி முருகனை சந்தித்துப் பேசுவதற்காக, இலங்கைத் தூதர் விரைவில்வேலூர் வருகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை அடைந்த முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தூக்குத் தண்டனை பெற்று பின்னர் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கொலைக் குற்றவாளி நளினி பெண்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். நளினியும், முருகனும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

முருகனைச் சந்திக்கிறார் தூதர்:

இதற்கிடையே மத்திய சிறையில் உள்ள முருகனை சந்திக்க சென்னையில் உள்ள இலங்கைத் தூதர் தமிழக அரசிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளார்.

இதன்படி, முருகனை சந்தித்துப் பேச இலங்கை தூதருக்கு அரசு அனுமதி வழங்கி வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நளினியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். நளினி சென்னையில் உள்ள தனி சிறையில்இருந்த போது அவருக்கு அரித்தரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தை இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள முருகனின் உறவினர்களிடம் வளர்கிறது. அந்தக் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு வந்தகோரிக்கையின் அடிப்படையில் இலங்கைத் தூதர், வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகனை சந்திக்க அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர் முருகனை சந்தித்துப் பேசுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+