For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஹா கூட்டணி பராக்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஏக பரபரப்பில் இருக்கிறது தமிழக அரசியல் களம்.

தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகளின்கூட்டணி நிலவரம் பற்றி வருகின்ற தகவல்கள் வானிலை அறிக்கை மாதிரி அடிக்கடிமாறிக் கொண்டே இருக்கிறது.

பா.ம.க, தி.மு.கவிலிருந்து விலகி, அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்கிற சூழ்நிலைஇரு கட்சிகள் தரப்பிலும் இருந்தாலும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கசேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கின்றனர் பா.ம.கவும், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினரும். குறிப்பாக, விழுப்புரம் பகுதியில் உள்ள சில பகுதிகளில்டாக்டர் ராமதாஸ் நுழையவே கூடாது என்று எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரின் பலம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள்.பா.ம.கவின் பலம் வன்னியர்களின் வாக்குகள் என்பதால் இரண்டையுமே விட்டுக்கொடுப்பதற்கு அ.தி.மு.க தலைமை தயாராக இல்லை என்கிறார் அ.தி.மு.க வின்முக்கியப் பிரமுகர்.

அவரே தொடர்ந்து பா.ம.கவை அ.தி.மு.க கூட்டணியில் இணைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனைசமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடக்கிறது என்றும் சொல்கிறார்.

பா.ம.க , அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் த.மா.காவுடன், தி.மு.க கூட்டணிஅமைத்தால் தான் சரி என்றும் தி.மு.க பிரமுகர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.அரசியல் தாண்டி, மூப்பனாருக்கும், கலைஞருக்கும் ஒரு நட்பு எப்பொழுதுமே உண்டு.அந்த நட்பு தி.மு.க , த.மா.கா கூட்டணியை மலர வைக்கும் என்று உறுதியாகநம்புகிறார்கள் தி.மு.க வினர்.

த.மா.கா தரப்பில் இன்னொரு விஷயமும் அடிபடுகின்றது. நாங்கள் எதிர்பார்க்கிற,ஆட்சியில் பங்கு என்கிற கருத்துக்கு அ.தி.மு.க தலைமை ஒப்புக் கொள்கிற மாதிரிதெரியவில்லை. அ.தி.மு.க மட்டுமல்ல, தி.மு.கவும் கூட ஆட்சியில் பங்கு என்கிறகருத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க , தி.மு.கவுக்குஎதிராக ஒரு வலுவான மூன்றாவது அணி அமைந்தால் என்ன என்றும் த.மா.காதலைமை யோசித்து வருகின்றது.

தி.மு.க , அ.தி.மு.க , மூன்றாவது அணி என்று மூன்று கோணத்தில் இந்த தேர்தலைசந்திப்பதே, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுடன் தற்பொழுது இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதையான விஷயம் என்றும் மற்றகூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மஹா கூட்டணி:

இதற்காக தி.மு.க கூட்டணியில் இருக்கும் மிக முக்கிய கட்சியான பா.ஜ.க, பா.ம.க,த.மா.கா இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து மஹா கூட்டணி அமைத்தால் அரசியல்நிலவரம் எப்படியிருக்கும்? என்கிற யோசனையும் மூன்று கட்சித்தலைவர்களிடம்நடந்து கொண்டிருக்கிறது.

மூன்று கட்சிகளுடன் ம.தி.மு.க வும் சேர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக வெற்றிஉறுதி என்கிற கருத்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. நான்கு கட்சிகளும் சேர்ந்தால்யாரை முதல்வராக முன்னிருத்துவது என்கிற கேள்வியும் கூடவே இருக்கிறது. அந்தவிவாதத்தில் மூப்பனாரை அனைத்துக் கட்சித் தலைவர்களுமே ஏற்றுக் கொள்வார்கள்என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

நான்கு கட்சித் தலைவர்களிடையே மஹா கூட்டணி பற்றிய யோசனைகள் தீவிரமாகஇருக்க அ.தி.மு.க, தி.மு.க தரப்பில், அப்படி ஒரு மஹா கூட்டணி அமைந்தால் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சந்தேகத்திற்கு இடமானதாகிவிடும் என்கிற கவலையும் இருக்கிறது. மஹா கூட்டணி முயற்சிகளை முறியடிக்கிறமுயற்சியில் இரு கட்சியின் முக்கியப் பிரகர்களுமே களமிறங்கியிருக்கிறார்கள்.

போதும் முப்பது ஆண்டுகளாக திராவிட கழகங்கள் தமிழகத்தை ஆண்டது என்கிறகருத்து மிக ஆழமாகவே மற்ற கட்சித் தலைவர்கள் மனதில் இருக்கிறது. இதனால்மூன்றாவது அணி அமைகிற நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறார்கள் தமிழகஅரசியல் பார்வையாளர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X