For Daily Alerts
Just In
வனத்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சத இட ஒதுக்கீடு
கோயம்பத்தூர்:
தமிழக வனத்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடுவழங்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னையில், 9-வது தமிழக வனத்துறை விளையாட்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துஇவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடுதரும் அதே நேரத்தில், பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் விளையாட்டுத் துறையில்ஈடுபாட்டுடன் இருந்தால் அவர்களுக்க பதவி உயர்வு அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு வனத்துறைக்கு ரூ. 100 கோடி வருவாய் கிடைத்தது என்றார் அவர்.
விளையாட்டு நிகழ்ச்சியில் தமிழக வனத்துறையின் 11 பிரிவுகளும் கலந்துகொள்கின்றன. 2 நாட்களுக்கு இது நடக்கிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]