கொலம்பியாவில் ஒரே ஆண்டில் 19 மேயர்கள் கொலை
பொகோதா (கொலம்பியா):
கொலம்பியா நாட்டின் குயிபில் நகர மேயர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த நாட்டில், இந்த ஆண்டில் கொல்லப்படும் 19-வது மேயர்இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கொலம்பியாவில் குயிபில் நகர் உள்ளது. கொலம்பியாவில் சண்டை நடக்காதநாளே இல்லை எனும் அளவுக்கு வன்முறையும், துப்பாக்கிச் சண்டையும் சகஜம்.
வன்முறைக்கு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18 மேயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இப்போது 19-வது கொலை நடந்துள்ளது. குயிபில் நகர மேயர் அல்பர்டோ எலியாஸ்டோரஸ், கண்டினர்கா மாநில ஆளுநரைப் பார்க்க வந்திருந்தார்.
அவரது கார் ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிகளுடன் அவரது காரைச் சூழ்ந்தனர். பின்னர்காருக்குள் இருந்த மேயர் மற்றும் சிலர் மீது சரமாரியாகச் சுட்டனர்.
இதில் மேயரும், மேலும் 2 பேரும் அங்கேயே இறந்தனர். பட்டப்பகலில் இந்தபடுகொலை நடந்தது. தலைநகர் பொகோதவிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில்குயிபில் நகர் உள்ளது.
மார்க்சிஸ்ட் புரட்சிக்காரர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் அடிக்கடி நடக்கும் சண்டைகாரணமாக கொலம்பியாவில் எப்போதுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளன. 1990-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 35,000 பேர் இந்தவன்முறைச் சம்பவங்களுக்குப் பலியாகியுள்ளனர்.