தமிழ்தேச எழுச்சியை தடுக்கமுடியாது .. நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

தமிழ்நாட்டில் இருந்து தமிழ் தேச எழுச்சியை அகற்ற முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தமிழக இளைஞர் முன்னனியின் 4-வது தமிழக மாநாடு திண்டிவனத்தில் நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணி தலைவர் யோகநாதன் தலைமை தாங்கினார்.மாநாட்டுக்கு வரவேற்புக் குழு தலைவர் கந்தசாமி வரவேற்றுப் பேசினார்.

மாநாட்டில் பழ.நெடுமாறன் பேசியதாவது:

தமிழர்களின் தேசிய தன்மையை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது. மதத்தின் பெயரால் தமிழர்கள் கொடுமை படுத்தப்பட்டனர். தமிழ்இலக்கியங்கள் தான் நம்மை ஒன்று படுத்தின.

தமிழை இழிவு படுத்தும் போது வள்ளலார் எதிர்த்தார். சங்கராச்சாரியார் எல்லா மொழிகளும் வேண்டும் என்ற பொழுது அனைத்து மொழிக்கும் தாய்,தமிழ் என்றார் வள்ளலார்.

தமிழன் என்ற உணர்வை ஊட்ட பெரியார் பெரும் முயற்சி எடுத்தார். அதை தொடர்ந்து மற்றவர்கள் பின்பற்றினர். நம்முடைய தமிழ் தேசத்திற்கு யார்எதிரிகள் என்பதை அடையாளம் காண வேண்டும். நான் தமிழன் என்றால் தீவிரவாதி என்கிறார்கள்.

ராஜ்குமாரை மீட்க நான், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் சென்றோம். அகில இந்திய கட்சிகள் எங்களைதீவிரவாதிகள் என்றனர். நாங்கள் ராஜ்குமாரை மீட்டோம், பாராட்டினார்கள். இது மனித நேயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முயற்சி.

மாநில கட்சி ஆதரவு இல்லாமல் இனி அகில இந்திய கட்சிகள் முழுபலத்துடன் டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாது. மாநில கட்சிகள் அந்தந்தமாநில மக்களின் நலன்களை பேணுவதால் செல்வாக்கு கிடைக்கிறது.

இருப்பினும் மொழி அடிப்படையில் செல்வாக்கு இல்லை. மாநில கட்சிகள் தங்கள் மாநிலத்தில் ஆட்சி அமைத்து தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளடெல்லியை நாடுகின்றனர்.

மாநிலக் கட்சிகளுக்கு டெல்லியில் செல்வாக்கு இருந்தும் அகில இந்திய கட்சியைச் சேர்ந்தவர்களையே பிரதமராக்குகின்றனர். இதனால் இவர்கள்தங்கள் மாநில மக்களின் செல்வாக்கை இழப்பார்கள். இது நான் மாநில கட்சிகளுக்கு விடும் எச்சரிக்கை.

இனிமேலாவது விழிப்புடன் செயல்பட்டு மாநிலங்களுக்கு சுயநிர்ணயம் அளிக்கும் சட்டத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இல்லை என்றால் அகிலஇந்திய கட்சிகளுக்கு ஏற்பட்ட கதிதான் மற்ற கட்சிகளுக்கும் ஏற்படும்.

தமிழ்நாடு தொழில் துறையில் முன்னணியில் இருப்பதாக கூறுகின்றனர். மகிழ்ச்சி, ஆனால் தமிழன் யாராவது தொழில் தொடங்கி இருக்கிறார்களா?தமிழ்தேச எழுச்சியை இனி யாராலும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற முடியாது என்றார் நெடுமாறன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+