லாக்கப் சாவு: 4 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

" போலீஸ் லாக்கப்பில் கைதி இறந்த சம்பவத்தில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸ் ஏட்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.

நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன் என்ற ரவி (21). பாபு என்ற அசோக்குமார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் பல்வேறு வழிப்பறிசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

நாமக்கல்லில் கடந்த 95ம் ஆண்டு ராஜம்மாள், பாப்பு என்ற இரு பெண்களிடம் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு சென்றனர். அப்போதுபொதுமக்கள் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இவர்களை கிராம நிர்வாக அதிகாரி நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பணியில் லிங்கசாமி (50) என்ற சப்இன்ஸ்பெக்டரும், ஏட்டு சாந்தாராம் (25), பெண் போலீஸ் ஏட்டு சுமதி (25), ஏட்டு ராஜேந்திரன் (34), ஆகியோரிடம் இருவரையும் ஒப்படைத்தார்.

இவர்கள் இருவரும் விசாரணைக்காக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் ரவி மர்மான முறையில் இறந்து கிடந்தான்.

இந்த செய்தியை அறிந்த ரவியின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சப் கலெக்டர்விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கலாவதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் லிங்கசாமி, ஏட்டு சாந்தராம், ராஜேந்திரன், சுமதிஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கொலையை மறைத்ததற்காக ஒராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+