மறைமுகப் போரை நிறுத்துங்கள் .. பாகிஸ்தானுக்கு பா.ஜ.க. கோரிக்கை
டெல்லி:
இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பினால்,முதலில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை அந்நாடு நிறுத்த வேண்டும்என்று பாரதீய ஜனதாக் கட்சி கூறியுள்ளது.
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் குமார் மல்ஹோத்ரா இதுகுறித்து டெல்லியில்கூறுகையில், பாகிஸ்தான் முதலில் தனது மறைமுகப் போரை நிறுத்த வேண்டும்.ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் மூலம் இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளுக்கு உதவுவதைநிறுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்யாதவரை பேச்சுவார்த்தை என்றபேச்சுக்கே இடமில்லை.
எல்லைப் பகுதியில் இந்தியா சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கு அகில இந்தியஹுரியத் மாநாட்டின் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபாராட்டுக்குரியது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ளமுதல் நடவடிக்கைதான் இந்த சண்டை நிறுத்தம் என்றார் மல்ஹோத்ரா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications