அசாமில் ஜனாதிபதி ஆட்சி கோருகிறது காங்.
டெல்லி:
அசாமில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டிவலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். அதில்கூறப்பட்டிருப்பதாவது:
அசாமில் வாழும் ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. இந்த வருடம் மட்டும் பிகார், ராஜஸ்தான்மாநிலங்களிலிருந்து அசாமுக்கு வியாபாரம் செய்ய வரும் பலர் கொல்லப்பட்டு விட்டனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு விட்டது.
மாநிலத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. கவர்னர் எஸ்.கே.சின்ஹா மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரத் தவறி விட்டார். இதனால் அசாமில்ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.
மேலும், முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவுக்கு சில ஊழல் வழக்குகளில் தொடர்புள்ளது. அவரை ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் நடந்துகொள்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications