இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்
மதுரை:
மதுரையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, கார் டிரைவரைப் படுகொலை செய்து காருடன் தப்பித்த இலங்கையைச் சேர்ந்த கும்பலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
1992 ம் வருடம் ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ராஜபாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தது. அங்கு நின்று கொண்டிருந்தகார் டிரைவரிடம் கார் வாடகைக்கு வேண்டும் என்று கேட்டது. அதற்கு அவரும் சரி என்று கூறினார்.
இதையடுத்து, அக்கும்பல் முறம்பு என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி கார் டிரைவருடன் சேர்ந்து முறம்புக்குச் சென்றது. கார் பாதி வழியில்சென்று கொண்டிருந்த போது அக்கும்பல் டிரைவரை மிரட்டி அவரைப் படுகொலை செய்து அருகிலிருந்த கரும்பு தோட்டத்தில் வீசி விட்டு காருடன் தப்பித்துவிட்டது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்துக் கொலைக் கும்பலைத் தேடி வந்தனர். பின்னர் இலங்கையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உள்பட 3பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ராமலிங்கம் வழக்கைவிசாரித்துத் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், இவ்வழக்கில் கொலைக்குற்றம் மற்றும் கார் கடத்தலில் ஈடுபட்டுள்ள 3 பேருக்கும் ஆயுள் தண்டனைவிதிப்பதாகத் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications