காஷ்மீர் சண்டை நிறுத்தம் மேலும் 1 மாதத்திற்கு நீட்டிப்பு
டெல்லி:
ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவிக்கப்பட்டிருந்த சண்டைநிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வாஜ்பாய்நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் லோக்சபாவில் கூறியதாவது:
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை எதுவும் மேற்கொள்வதில்லை என்றும், அங்கு சண்டைநிறுத்தம்கடைபிடிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
சண்டை நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் மட்டுமே நடந்தன. இதனால் சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனையின் முடிவில் சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு அதாவது 2001 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம் வரை நீட்டிக்கலாம்என்று முடிவெடுக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக கடைபிடிக்கப்பட்ட சண்டைநிறுத்தத்தால் ஜம்மு காஷ்மீரில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்களே நடந்தன என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications