உருவாகிறது உலகின் உயரமான கட்டிடம்

Subscribe to Oneindia Tamil

சியோல்:

தென்கொரியாவின் புசான் நகரில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப்பணி வியாழக்கிழமை தொடங்குகிறது.

தி ஸ்கைஸ்கிராப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கட்டிடம் 464.5 மீட்டர் உயரத்தில் அமையும். கட்டுமானப் பணி வரும் 2005 ம் ஆண்டு நவம்பருக்குள்முடிவடையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உலகிலேயே உயரமான கட்டிடமாக கோலாலம்பூரில் உள்ள டுவின் டவர்ஸ் கட்டிடம் உள்ளது. இதன் உயரம் 452 மீட்டர். இதை விடதற்போது கட்டப்படவுள்ள கட்டிடத்தின் உயரம் 12.5 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும்.

இந்தக் கட்டிடம் 107 மாடிகளுடன் கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தற்போது உலகிலேயே மிக உயரமான கட்டிடமான சீனாவின் ஷாங்காய்நகரில் உள்ள உலக நிதி மையத்தை விட 5.5 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும்.

புசான் நகரில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் கீழ்தளம் மட்டும் 464, 557 சதுர கிலோ மீட்டரில் அமைக்கப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தில் பொழுதுபோக்கு மையங்கள், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், வியாபார ஸ்தலங்கள், கருத்தரங்கு மையங்கள்ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+