அபின் பதுக்கிய 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி என்ற இடத்தில், 700 கிராம் அபின் போதைப்பொருள் வைத்திருந்த தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
அறந்தாங்கியைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார். அவரதுகடையில் அபின் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீஸுக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில்அங்கு 700 கிராம் அபின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்துமுஸ்தபா, மகன்கள் அப்துல் சலாம், அப்துல் கலாம் ஆசாத் ஆகியோரை போலீஸார்கைது செய்தனர். கடையும் சீல் வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications