90 வயது தியாகியின் கண் தானம்

Subscribe to Oneindia Tamil

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த 90 வயது தியாகி இறப்பதற்கு முன் தனது கண்களைத் தானம் செய்தார்.

அவர் பெயர் கிருஷ்ணசாமி நாயுடு (90). இவர் கள்ளுக்கடை மறியல், உப்புச்சத்தியாகிரகம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.

வல்லம் ஊராட்சி மன்றத் தலைவராக 40 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு மனைவி 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்தின் போது இவர் தனது கிராமத்திலேயே தலைமறைவாக இருந்தார். கிராம மக்கள் யாரும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் ஆங்கிலேயர்கள் அந்த கிராமத்திற்கு ரூ 2,500 கூட்டு அபராதம் விதித்தனர்.

கிருஷ்ணசாமி நாயுடுவைக் காட்டிக் கொடுக்காமல் கிராம மக்களே அந்த அபராதத்தைக் கட்டினர். இந்தியாவிலேயே முதல்முறையாக வல்லம்கிராமத்திற்குத்தான் கூட்டு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+