சட்டசபைக்கு ஒரே நாளில் வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
தேர்தல் குறித்து, சென்னை வந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் அடையாள அட்டைவழங்கும் பணி இன்னும் முடிவடையாததால் தேர்தல் தேதியை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடக்கிறது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்துவிவாதிப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
வரும் மார்ச் மாதத்தில்தான் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும். அசாமில் ஏப்ரல் 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை தேர்தல் நடத்தலாம் என்று அந்தமாநில அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் 80 சதவீதவாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும்.
சட்டசபைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நடப்பதையொட்டி சம்பந்தப்பட்டமாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி லோக்சபா தொகுதிக்கும் தேர்தல் நடக்கும். இதற்கேற்ப விதிகளைத் தளர்த்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம்உண்டு. தற்போது உள்ள நிலையில் வரும் ஜனவரிக்குப் பிறகு தான் தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது என்பது முழுமையாகத் தெரியவரும்.
இருப்பினும் தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணமூர்த்தி.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications