இந்திய போர் விமானங்களை தீவிரவாதிகள் தாக்கலாம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய போர் விமானங்கள், ஹெலிகாப்டர் ஆகியவற்றைத் தாக்கும் விதத்தில் தீவிரவாதிகளிடம் ஏவுகணைகள் இருக்கும் என்பதை மறுக்க முடியாதுஎன்று ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அறிவித்த பதிலில் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெர்னாண்டஸ் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதல்களில் இந்த ஆண்டு மட்டும் 1673 இந்திய ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 419 பேர் துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் சண்டையில் கடந்த வருடம் 2388 பேர் கொல்லப்பட்டனர். 983 பேர்காயமடைந்தனர்.
இந்த வருடம் 1394 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 265 பேர் கைது செய்யப்பட்டனர். 74 தீவிரவாதிகள் சரணடைந்தனர் என்றார் ஜார்ஜ்பெர்னான்டஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications