பா.ம.கவுக்கு இடமில்லை .. கூறுகிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
அதிமுக, தமாகா கூட்டணி தொடரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 3 வது அணி ஏற்படும் என்று கூறப்படுகிறது. 3 வது அணி ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு மதச்சார்பற்ற கட்சிகள் தான்வெற்றி பெற முடியும்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணி தொடரும். அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அதிமுக வுடன் பாமக சேரும் என்று கூறப்படுகிறது.அதிமுகவுடன் பாமக என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஜெயலலிதா, துக்ளக் ஆசிரியர் சோவை சந்தித்துப் பேசினாரே என்று கேட்கிறார்கள். சோ நல்ல நண்பர். அதுபற்றி நான் கருத்துக் கூற எதுவும் இல்லை.தேர்தலின் போது தான் கூட்டணி பற்றி எதுவும் கூற முடியும் என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications