போலீஸ் உடையில் வந்து திருடிய பெண்
கோவை:
கோவையில் பெண் போலீஸ் உடையில் வந்து ஒரு வீட்டில் தங்கி திருடிச் சென்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அயூப்கான். இவர் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் இவரது வீட்டிற்கு வந்தார். அங்குவந்து தான் ஒரு பெண் போலீஸ் எனவும், தங்க இடம் தர வேண்டும் என வேண்டினார். பெண் போலீஸ் என்பதால் அவரை நம்பி அயூப்கான் இடம்கொடுத்தார்.
இங்கு தங்கியிருந்த 5 நாட்களில் போலீஸ் உடையில் காலையில் வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். பின்னர் திடீரென அவரைக் காணவில்லை. இந்தப்பெண்ணைக் காணாத நிலையில், அவரது வீட்டில் பட்டுச்சேலை உள்பட பல பொருட்கள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அயூப்கான் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து உஷரானார். அப்போதுபோலீஸ் உடையில் இருந்த அந்த பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்தபோது அப்பெண் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் போலீஸ் உடையில் சென்றுபலரை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications