சண்டை நிறுத்த நீட்டிப்பு .. பா.ம.க. வரவேற்பு
பாண்டிச்சேரி:
ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதை, பாட்டாளி மக்கள் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது என்று கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்முகாஷ்மீரில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்திருந்தார்.
அதை தற்போது அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறதுஎன்றார்.
பாண்டிச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நாராயணசாமியும் சண்டைநிறுத்தத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அரசு காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு, காஷ்மீர்பிரச்சனை தீர வழிவகுக்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications