படமெடுத்த பாம்பு .. பயந்துபோன பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள சாஸ்தாபுரத்திலுள்ள வீரசாஸ்தா கோவிலில் நாகப்பாம்பு ஒன்று 2 மணி நேரம் படமெடுத்து ஆடியது.

வீரசாஸ்தா கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று வந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களும், அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களும் பாம்பைக் கண்டு அலறி ஓடினர். யாரையும் சட்டைசெய்யாத பாம்போ கோவில் சன்னிதானத்தைச் சுற்றி வந்தது.

இந்த விஷயம் பரவியதும் ஊர்மக்கள் கோவில் முன் கூடி விட்டனர். பின்னர் பக்தர்கள் முன்னிலையில் பாம்பு தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடனமாடியது.இந்த பாம்பு நடனம் வீடியோ படம் எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சன்னிதானத்தைச் சுற்றி வந்து மறைந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+