For Daily Alerts
Just In
மார்ச் 26ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.
ஐந்தரை லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சையை எழுதுகிறார்கள். ப்ளஸ் டூ பரிட்சைகள் மார்ச் மாதம் 5 ம் தேதிதொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக பள்ளி, கல்வித்துறை செயலாளர் கவுரிசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளை மார்ச் மாதம் நடத்தி முடிக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. அதன்படி ப்ளஸ் டூ தேர்வு வரும் 5 ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி முடிவடையும். மூன்றரைலட்சம் மாணவ, மாணவியர் ப்ளஸ் டூ தேர்வு எழுதுகிறார்கள்.
எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26 ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4 ம் தேதி முடிவடையும். பரிட்சை எழுதும்போதுகாப்பி அடிப்பதைத் தடுக்க ஒரே வகுப்பில் 3 வகையான வினாத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்கவுரிசங்கர்.
Comments
Story first published: Monday, March 20, 2000, 5:30 [IST]