For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை மோதலில் 12 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 12பேர் கொல்லப்பட்டனர் என்று ராணு வ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் கொழும்பிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிகோணமலையில் உள்ள கடற்படைக்குச்சொந்தமான பகுதியில் மோர்ட்டார் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் 5 கடற்படை மாலுமிகள் இறந்தனர். 3 பேர்காயமடைந்தனர்.

முன்னதாக, அம்ப்பாராவில் உள்ள பக்கீலாவில் போலீஸார் தங்கியிருந்த இடத்தில் விடுதலைப்புலிகள் தாக்குதல்நடத்தினர். அங்குள்ள எல்லைப் பாதுகாப்பு சிறப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் 7 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.

1983 ம் வருடத்திலிருந்து இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கியுள்ளவடக்குப்பகுதியில்தான் அம்ப்பாரா மற்றும் திரிகோணமலை மாவட்டங்கள் உள்ளன.

இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மாதம் மட்டும் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே நடந்த தாக்குதலில், இரு தரப்பிலும் 215 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X