அசாமில் 8 பேர் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி:

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான அசாமில் இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் உள்பட 8பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர்.

போலீஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறியதாவது:

தலைநகர் கவுஹாத்தியிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகள் சரணாலயத்தில் பூடோலேன்ட் தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகளைநோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்ததீவிரவாதிகள்.

மனாஸ் புலிகள் சரணாலயம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருந்த போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டையடுத்து அங்கிருந்த பலதீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.

முன்னதாக, பூடோலேன்ட் தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகள் அசாமில் வாழும் பழங்குடியினருக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்றகோரிக்கையை முனஅவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அசாம் லட்சுமிபூர் மாவட்டத்தில், வேறு மாநிலங்களிலிருந்து குடியேறியிருந்த முஸ்லீம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் இறந்தனர்.இவர்கள் நான்கு பேரும் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்.

இச்சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்திருந்தனர். இந்தத் தீவிரவாதிகள்எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று உடனடியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் உல்பா தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றுபோலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+